Posts

பட்டினப்பாலை - அறிமுகம்

                                                                     முன்னுரை தமிழ் மொழியின் தொன்மை இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழைமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல் [1] . அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.  இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.   சங்க இலக்கியம் சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி.

பட்டினப்பாலை - மூலம்

                                                                    பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்   வசை இல் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் , தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி , வான் பொய்ப்பினும் , தான் பொய்யா ,                                                     5 மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி , கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவின் , கவின் வாடி ,                                                                       10 நீர்ச் செறுவின் நீள் நெய்தல் பூச் சாம்பும் புலத்து ஆங்கண் , காய்ச் செந்நெல் கதிர் அருந்து மோட்டு எருமை முழுக் குழவி , கூட்டு நிழல் , துயில் வதியும்                                                                       15 கோள் தெங்கின் , குலை வாழை , காய்க் கமுகின் , கமழ் மஞ்சள் , இன மாவின் , இணர்ப் பெண்ணை , முதல் சேம்பின் , முளை இஞ்சி அகல் நகர் வியல் முற்றத்து ,