Posts

உங்கள் கவனத்திற்கு

  அன்பிற்குரிய வாசகர்களுக்கு, வணக்கம். புதிய   பதிவுகள் அல்லது வாசகர்களுக்கு நான் கூறவிரும்பும் செய்திகளை https://updateinfo2024.blogspot.com என்ற பதிவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். ஆகவே, அவ்வப்பொழுது, https://updateinfo2024.blogspot.com என்ற பதிவிற்குச் சென்று என்னுடைய பதிவுகளைப் பற்றிய புதிய   செய்திகளைத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். அன்புடன், பிரபாகரன்

பட்டினப்பாலை - அறிமுகம்

                                                                   பட்டினப்பாலை -  பொருட்சுருக்கம் தமிழ் மொழியின் தொன்மை இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழைமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல் [1] . அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.  இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இ...

பட்டினப்பாலை - மூலம்

                                                                    பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்   வசை இல் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் , தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி , வான் பொய்ப்பினும் , தான் பொய்யா ,                                                     5 மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி , கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவின் , கவின் வாடி ,                ...